சனி, 19 ஜூன், 2010

சாதனை நண்பர்கள்!



அண்மைய காலமாக பேஸ்புக்கின் மார்க்கட் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று ஒரே கவலைப்பட்டுக்கொண்டிருந்த நமது நண்பர்களின் நெஞ்சில் பால் வார்த்தால் போல் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2008 கணித பிரிவு மாணவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியிருப்பது அண்மைய செய்தித்தாள்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்து உள்ளது! இவர்களின் இந்த முன்னோடியான செயற்பாடுகள் உலகின் அத்தனை பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக‌வும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன!

யார் இவர்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிற்கு இருக்கும் ! வெள்ளவத்தையில் அண்மைய காலமாக சுற்றி திரியும் "நரேன் குரூப்" என அழைக்கபடும் அர்ஜீண் தலைமையிலான , பிரசாந்த்(பட்டு), பிரபல பாடகர் குருநாதரின் தவப் புதல்வன் ஜனா-குரு, காட்டுக்கந்தோர் ஒழுங்கை தனஞ்சி, டேஞ்சர் சுறையா, இவர்களின் அரசியல் ஆலோசகர் ஆனந்தநேசன், ஆகியோரும் இவர்களிட்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் எட்வின் லெஸ்லீ ஆகியோரே இந்த அணியினர்! அண்மைக்காலமாக பேஸ்புக்கை ஓபன் பண்ணினால் போதும் நூறு நோடிபிகேஸன்கள், பத்து பிரண்ட்ஸ் ரிக்குயஸ்ட் என்று ஒரே களேபரமாக இருக்கிறது பேஸ்புக்! அகா! பத்தில ஒரு ரிக்குயஸ்டாவது தெரிஞ்ச பெண்கள் எவருடையதாக இருக்க வேண்டும் என்று அத்தனை தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, மனம் பதைபதைக்க பார்த்தால், என்ன கண்றாவி! இவர்களின் முகம் தான் Requestஇல் இருக்கும்! அந்தக் கடுப்பில் requestஐ ignore பண்ணிட்டு, notificationஐ பார்த்தால், எதோ ஒரு போட்டோவில் நம்மளை Tag பண்ணிட்டு , வரிசையா கமெண்ட் பண்ணி இருப்பார்கள்!
என்ன தான் இருந்தாலும், பல மாதங்களாக வெறுமையாக இருந்த பலரின் புரோபயில்கள் இவர்களின் வருகையால் புத்துணர்ச்சி பெற்று உள்ளதை மறுக்க முடியாது!


இதே வேளை, வேலையில்லாமல் வெட்டியாக, பேஸ்புக்கிட்கு முன்னாலேயே, ஏதாவது notificationகள் புதுசா வருமா, நாம கமெண்ட் பண்ணலாமா என்று வழி மேல் விழி வைத்து காத்துகிடந்த றொமேஸானந்தா(நித்தியானந்த அல்ல) இவர்களின் வருகையால் புத்தெழுச்சி பெற்றார்! அவரின் மகிழ்விற்கு அளவே இல்லாமல் போய் விட்டது! சந்தோசத்தில் அழுதே விட்டார் என்றால் பாருங்களேன்! அதிலும், அர்ஜீணும், பட்டுவும் என்னமா கவிதை எழுதிறாங்கள்~! எங்கிருந்து தான் இப்படி வருதோ தெரியவில்லை! கேட்டால் "அதுவா வருகிதாம்"! இவர்கள் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாது!(அதுதான் இவங்களே அழிச்சுக்கிறங்களே என்று முட்டாள்தனமா கேட்கக்கூடாது ஆமா!) அசைக்க முடியாது!

அண்மையில் இவர்கள் தெகிவளை மிருக காட்சி சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேட்கொண்டது,தொல்பொருள் காட்சியகத்திட்கு சென்றது, ராவணன் படம் பார்க்க சென்றது, ரயில் பயணம் சென்றது(இந்த காமெடி நிகழ்ச்சி பற்றி பின்னர் விரிவாக எழுத்தப்படும்) என்று கொழும்பு நகரையே இந்த நட்சத்திரப் பட்டாளம் ஒரு கலக்கு கலக்கி வருகிறது! இந்த அணியில் இடம் பிடிக்க பல நண்பர்கள் தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கிடைகின்றன! கடந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கட் Big Matchசில் சென்ட் ஜோஎன்ஸ் மண் கவ்வியபோதும், "ஓடி பிடித்தல்" பிக் மட்சில்சென் ஜோண்ஸ் அணி மாபெரும் வெற்றி ஈட்டியது நினைவிருக்கலாம்! அந்த அணியில் இவர்கள் இடம் பெற்றிருந்தமையை இவர்கள் நிரூபிக்கும் முகமாக வெள்ளவத்தையில் தினமும் ஓடி பிடித்து விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன! பேஸ்புக்கை பழைய நிலை அடையச்செய்யும் முயட்சிகளில் தளராமல் உழைக்கும் இவர்கள் நிமித்தம் சென் ஜோன்ஸ் மட்டுமல்ல இலங்கை மாதவே பெருமை கொள்கிறது! எமது மண்ணில் இருந்து இப்படி திறமைசாலிகளா? நினைக்கும் போதே அப்படியே புல்லரிக்கிறது!

வாழ்க தமிழ்!

வளர்க உங்கள் சேவை!

2 கருத்துகள்:

Poornan சொன்னது…

//அரசியல் ஆலோசகர் ஆனந்தநேசன், ஆகியோரும்//
இது எப்ப நடந்தது?

maravan சொன்னது…

என்னமா கவிதை எழுதிறாங்கள்..........அதுவா வருகிதாம்.
எது????????????

கருத்துரையிடுக