வெள்ளி, 23 ஜூலை, 2010

உடைந்தது நரேன் குரூப்!!!!!!!!!!!!!!!!


அரிதாகிவரும் பேஸ்புக் பாவனையை மீண்டும் உயர்த்தவும், பேஸ்புக் உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திட்காக, நரேன்.அர்ஜீன் அவர்களால் கடும் முயட்சிகளிட்கு பின் உருவாக்கப்பட்ட வெள்ளவத்தை நரேன் குரூப்பினர் தமது இலட்சியத்திலிருந்து விலகி வருவது பேஸ்புக் பாவனையாளர்களை கவலையடையச்செய்திருக்கின்றது!!
கடந்த சில மாதங்களாக தமது கடுமையான போராட்டத்தினால், பேஸ்புக் பாவனையாளர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய இவர்கள், தற்போது தமது பேஸ்புக் பாவனையை குறைத்திருப்பது குறித்து பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுல்லாது!!
இது குறித்து தகவல் அறியும் பொருட்டு நமது "வெள்ளவத்தை கருப்பு ஆடு"
மேட்கொண்ட முயட்சிகளின் பயனாக சில தகவல்கள் கிடைத்துள்ளன!!!!!!

சில தினங்களிட்கு முன்னர் நரேன்.அர்ஜீன் அவர்கள் இளையவர்களிட்கு வழிவிடும் வகையில் தனது தலைமைப்பதவியை ராஜீனாமா செய்ததும், புதிய தலைவராக நரேன்.சுரேஷ் அறிவிக்கப்பட்டமையும் அனைவரும் அறிந்ததே!! இதேவேளை தலைமை பதவிக்காக கடும் முயசிகளை மேட்கொண்டிருந்த நரேன்.பட்டு அவர்கள், பதவி கைமாரியமையினால் கடும் அதிருப்திக்காலானார்! இதனால் க்ரூப்பிட்குள் உட்கட்சி முரண்பாடுகள் அதிகரிக்கவே, முன்னாள் தலைவர் நரேன்.அர்ஜீன் அவர்கள் பட்டுவி க்ரூப்பிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தினார்!
இதனால் மனமுடைந்துபோன பட்டு தனது பால்ய நண்பனும் , ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளருமான நரேன்.சுமந்திரனுடன் வெளியேறி நரேன் குரூப் எனப் பொருள்படுமாறு "பொல்லார் அணி" எனும் புதிய குரூப்பை உருவாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது!!!
இது குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய பொல்லார்..பட்டு அவர்கள் " நான் நரேன் குரூப்பினரிட்காக அல்லும் பகலும் கடுமையாக உழைத்தேன், பாஎச்புக் பாவனையை உயர்த்த வேண்டும் என்ற எமது குரூப்பினரின் கொள்கைக்காக இருபத்திநான்கு மணிநேரமும் ஒன்லைனில் இருந்தேன், ஒரே நாளில் பல்வேறு வால் போஸ்டுகளை எழுதித்தள்ளினேன், நான் என்ன எழுதுகிறேன் என எனக்கே தெரியாத போதும், எங்காவது ஆட்டையப்போட்டு கமெண்ட் பண்ணினேன்! ஆனால் சுரேஷ் பேஸ்புக் பாவனையை உயர்த்துவதட்காக என்ன செய்தார்? ராப் பாட்டுக்கு ஆடிவிட்டால் போதுமா? இவ்வளவு சேவைகள் செய்த எனக்கு தலைமைப்பதவி வழங்காமல், தனக்கு ஹோட்டல் ரோலக்சில் ஒரு பிளேன் ரீ வாங்கித்தந்த ஒரே காரனத்திட்காக சுறேஷிட்கு தலைமைப் பதவி வழங்கியுள்ளார் அர்ஜீன், இதுவே நானும் பொல்ல்ர்..சுமந்திரனும் இணைந்து புதிய குரூப்பை உருவாக்க காரணம்" இப்படி முடித்தார் பட்டு.

பேஸ்புக் பாவனையில் அர்ஜீனுக்கு ஈடு இணையாக விளங்கும் ஒரே நபர் பட்டு மட்டுமே! (இன்னொருவர் இருக்கிறார் பெயரைச் சொன்னாள் டென்சனாகிவிடுவார், அவர் பெயர் நித்தியானந்தா இல்லை. வேற வேற!)
இப்படி இருக்கையில் சுறேஷிட்கு எப்படி தலைமைப்பதவி வழங்கப்பட்டது என மக்கள் கேள்விஎளுப்பியுள்ளனர்!
நரேன் குறூப்பினரின் பெயர்கள்.
நரேன்.சுரையா(சுரேஷ்) -தலைவர்
நரேன். சினேக் நேசன்- செயலாளர்
நரேன். ஜனா-குரு-தொழில்நுட்ப பிரிவுத் தலைவர்
நரேன்.தனஞ்சயன்- பிரச்சாரப் பீரங்கி
நரேன்.பிரதாபன்-கொம்மிட்டீ மெம்பர்

பொல்ல்ர் அணி விபரம்.
பொல்ல்ர் .பட்டு-தலைவர்
பொல்ல்ர் .சுமந்தி-செயலாளர்

வியாழன், 1 ஜூலை, 2010

காதலிகள் தேவை!



2008 A\L சென் ஜோண்ஸ் மாணவர்கள் பலர் கடுமையாக‌ முயன்றும் காதலிகள் கிடைக்காமையினால் மிகவும் மனவருத்தத்துடன் தமது வாழ்க்கையை கழித்து வருவது நமது குழுவினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது! இதேவேளை சிலர்(?) எப்படியும் இவ் வருட இறுதிக்குள் அட்லீஸ்ட் ஒரு கேர்ள் பிரண்ட்டையாவது பிடிப்பதாக நண்பர்களிடம் சவால் விட்டுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன!

இப்படியாக காதலிகள் இல்லாமல் (நாம் உட்பட) சுற்றித்திரியும் நாம் அனைவரும் இணைந்து சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருந்தமை அனைவரிற்கும் தெரிந்ததே! இவ் அமைப்பில் நரேன் குரூப்பினரையும் இணைத்துக் கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை! இதற்கு காரணம் அவர்களில் சிலர் ஒரு சப்பை பிகரையாவது வைத்துள்ளதாக அறிய வருகிறது!
ஆயினும் அவர்களில் சிலர் இவ் அமைப்பில் இணைந்து உள்ளனர்! இது பற்றி அண்மைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது!
அதில் பின்வரும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டன!

1) இப்படி காதலிகள் இல்லாமல் இருப்பது இவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில் இவர்களிற்கு(நாம் உட்பட) ஒரு அவப் பெயரை ஏற்படுத்துகிறது!

2)இப்படி காதலிகளுக்காக‌ காத்திருந்து காத்திருந்து 78% இற்கும் மேற்பட்டவர்களிற்கு வழுக்கை விழத் தொடங்கிவிட்டது!

3) இவர்களில் பலர், தமக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு என்று காட்டிக்கொள்வதற்காக‌ , அடிக்கடி "பேஸ் புக்" இல் "லைப் பாக்ஸ்" ஐ ஒப்பின் பண்ணி "Kiss", "Romantic", "Marriage" இப்படி அவுட்-ஸ்டான்டின்க் பெறுபேறுகளை ஈட்டி வருகின்றனர்!

4) அடிக்கடி பேஸ்புக்கிலேயே தவமாய் தவமிருந்து "Friend requestகளை பெண்களை நோக்கி எறிவதும், அவர்கள் "ignore" பண்ணியதும் மனம் உடைந்து விடுவதும், தற்செயலாக "Accept" பண்ணப்ப்படுமிடத்தில், அதை ஒரு பெரிய விழாவாகவே எடுத்து நண்பர்களிட்கு விருந்து வைப்பதும் இவர்களின் வாடிக்கையாகி விட்டது!

5) தாம் லவ் பண்ணுவதாக காட்டிக்கொள்வதற்காக‌ எங்காவது இருக்கும் காதல் கவிதைகளை ஆட்டையப் போட்டு பப்ளிஷ் பண்ணுவதும், ஒரே பீலிங் போல ஓவர் பில்ட்-அப் காட்டுவதும் வழக்கமாய் போய் விட்டது!

6) இதேவேளை நண்பர்கள் முன்னால் "456" இற்கு டயல் செய்து யாரோ ஒரு பெண்ணிடம் கதைப்பது போல சிரித்து சிரித்து கதைப்பதும் , கேட்டால், "பெர்சனல் " என்று கூறுவதுமாக இவர்களின் நிலை கவலைக்கிடமாகி விட்டது!
எனவே இப் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதற்காக‌ உங்கள் அறிவுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!
உங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்!!!!!!!!!!!!!

ஞாயிறு, 20 ஜூன், 2010

திகில் ரயில் பயணம்!




வெள்ளவத்தையில் அண்மைக்காலமாக கலகலப்புடன் சுற்றி திரியும் அர்ஜீன்,பட்டு, சுரேஷ், ஆனந்தநேசன், ஜனா-குறு,தனஞ்சி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம், சில தினங்களிட்கு முன்னர், வெள்ளவத்தை பீச்சில், சோகமே உருவாக அமர்ந்து இருந்தனர்! கடலை வெறித்துப் பார்த்தபடி மௌனமாக, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவர்களின் மௌனத்தை அவ வழியே கடந்து சென்ற ரயிலின் கொடூர சத்தம் கலைக்கவே,அவர்கள் சுய நினைவிற்கு வந்தனர்! கொழும்பின் அத்தனை முக்கிய இடங்களையும் சுற்றி ஒரு ரவுன்ட் அடித்துவிட்ட அவர்கள், வேறு எங்கு போகலாம் என்று நினைத்துகொண்டிருக்க, அந்த ரயில் இவர்களிட்கு, எதோ செய்தியை சொல்லாமல் சொல்லிய படி சென்றது! இவர்கள் இது வரை ரயிலில் ஏறியதில்லை ஆதலால்," ஒரு சேஞ்சிற்கு ரயிலில் ஒருக்கா போயி பார்ப்போமா?" என்று பட்டு ஆர்வ மிகுதியில் கத்த, " அட, முன்னம் பின்னம் எங்களில் யாராவது, ரயிலில் போயிருக்கிறோமா? விஷயம் தெரியாமல் போயி வம்பில மாடிறதா?" என்று தனஞ்சி, இராஜதந்திரமாக சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர்! அதுவரை பொறுமையாக இருந்த அர்ஜீன் வெகுண்டெளுந்து " அடங் கொய்யால! இது பெரிய விசயமா? நான் அந்தக் காலத்தில ஸ்கூல் இற்கு ரயிலில தான் போறனான்! ரயிலில போறது எனக்கு வாக்கிங் போற மாதிரி!, பயப்படாமல் வாங்கோ, நான் கூட்டிட்டு போறான்! " என்று புரூடா விட, நடக்கப்போவதை அறியாத அந்த அப்பாவி நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்!(வெள்ளவத்தை கடலில் அல்ல).

இப்படியே பேசிய படி, ஐந்து ரூபாவிற்கு வாங்கிய கடலையை " எள்ளானாலும் ஏழாய் பிரித்து உண்ண‌ வேண்டும்" என்ற திருவள்ளுவரின்(?) கூற்றிற்கு அமைய கடலையை உண்டனர்! இப்படியே, இருட்டுப்பட, நேவிக்காரன் போக்கஸ் லைட்டை பீச்சி அடிக்க, அனைவரும், வெடிச்சத்தம் கேட்ட கழுதைகளைப் போல ஓடத்துவங்க, அன்றைய மீட்டிங் இனிதே நிறைவிற்கு வந்தது!

திட்டம் இடப்பட்டபடி போர்ட் இற்கு சென்று ரயில் ஏறுவதாக அனைவரும் ஒத்துக்கொண்டனர்! அப்போது ஜனா‍‍‍குரு " அங்க போயி ரயில் ஏறுவது அலுப்பு பிடிச்ச வேலை, பேசாமல், பீச்சில நின்று, கையக் கால காட்டி மறிச்சு ஏறுவோம்! கண்டக்ட்டர் பேசினால் பேசட்டும், நாங்க வாங்காத பேச்சா! " என்று கூற, அனைவரிட்கும், அது ஒரு நல்ல ஜோசனையாக பட்டது! அனைவரும் ஜனாவை புகழ‌, மிகவும் வெட்கப்பட்ட ஜனா " சீ! போங்கள்!" என்று கூற, கொஞ்சம் சயன்டிபிக்கா ஜோசித்த சுரேஷ் " அட, பஸ்சில தான் அப்படி ஏறலாம், ரயிலில அப்படி ஏற முடியாது என்று கூற, ஆனந்தநேசனும் தன பங்கிற்கு " ஓமோம் இப்ப ரூல்ஸ மாத்திட்டான்கள், சுரேஷ் சொன்னது தான் கரக்ட்! " என்றான்! பட்டுவும் "அட, நான் நேற்று நியூஸ் பேப்பர் பார்க்கைல்லை, அதில சில வேலை இந்த நியூஸ் வந்து இருக்கும்!" என்று ஆதங்கப்பட்டார்! அப்போதுதான் வேகப் பந்து வீச்சாளர் சுமந்திரன், இந்திய அணியுடனான போட்டியை முடித்துக்கொண்டு(கொஞ்சம் ஓவரா போயிட்டுதோ? ஸ்கூல்லையே, இவன் பந்து போடுறன் என்று ஐந்து நிமிடங்களாக தலையை சுழட்டு சுழட்டு என்று சுழற்றி விட்டு, பந்து போட்டதும்,இவன் வீசும் பந்து பட்ஸ்மனை நோக்கி போகுதோ இல்லையோ, லெக் அம்பயரிற்கு படக்கூடாத இடத்தில் பட்டதும் இதுவரை முறியடிக்கப்படாத இவனது சாதனைகள்) இவர்களுடன் பயணத்தை தொடங்கினான்!

எப்படியோ, போர்ட் இற்கு சென்று ஸ்டேசனிற்கும் சென்று விட்டார்கள்! அங்கே பிளட்போமில் பல ரயில்களை கண்டதும் இவர்களால் தமது சந்தோசத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை! தமது சந்தோசத்தை இனிப்பு பரிமாறி தெரிவித்துக்கொண்டனர்! தனஞ்சியன் கண்களில் இருந்து, தாரை தாரையாக கண்ணீர் ஊற்றியது! பல ரயில்கள் இருந்தபடியால் குத்துமதிப்பாக அழகான பெண்கள் இருந்த ரயிலில் ஏறி ஒருவாறு அமர்ந்து கொண்டனர்! அருகில் ஒரு தமிழ் பெண்மணியும் இருந்தார்! இவர்களின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த அப்பெண்மணிக்கு அர்ஜீன் தலைமையிலான, அணியினரை பார்க்க, பரமார்த்த குருவும் சீடர்களும் கதை நினைவிற்கு வர, ஒரே ஜாலியாக போய்விட்டது! சக பயணிகளும், இவர்களை ஒரு மார்க்கமாக பார்க்க இவர்களிட்கு நடக்க போகும் விபரீதம் தெரியாமல் செம ஜாலியாக, அமர்ந்து இருந்தனர்!


ரயிலும் புறப்பட துவங்கியது! ரயில் பின்புறமாக நகர்வதை பார்த்த நண்பர்கள், பதறத் தொடங்கினர்! ஆனந்தநேசனோ " பதறாதீங்க பிளீஸ்! இப்ப டிரைவர் ரிவர்ஸ் எடுக்கிறார், கொஞ்சம் பொறுங்க!" என்று பொறுப்புடன் கூற, அருகில் இருந்த பெண்மணியால் சிரிப்பை அடக்க முடியாது சிரிக்க துவங்கினார்! அருகில் இருந்த பெண் தன்னை பார்த்து தான் சிரிப்பதாக, சுமந்திரன் சொல்ல இல்லை என்னைப் பார்த்து தான் என்று ஜனா சொல்ல, வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது! உடனே அப்பெண் தலையிட்டு, "நான் உங்கள் எல்லோரையும் பார்த்துத்தான் சிரித்தேன் என்று கூறி அமைதிப்படுத்தினார்! ரயில் வேகமாக பற‌ந்து கண்டே இருந்த்தது!


சரி, அடுத்த ஸ்டேஷன் வெள்ளவத்தைதான் என்று கூறிய படி, அர்ஜீன் இறங்குவதற்கு ஆயத்தமானார்! இதை பார்த்துக்கொண்டிருந்தவர்களால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை! போர்டில் இருந்து வெள்ளவத்தை இவ்வளவு தூரமா? என்று தமக்குள்ளேயே எண்ணத்துவங்கினர்! ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த பொது, அப்பகுதியில் "மருதானை" என்று எழுதி இருந்த்தது! இது என்ன புது ஊரா இருக்குது? வெள்ளவத்தைக்கு போற வழியில, இப்படி ஒரு ஊரே இல்லையே? என்று பதறிய‌போதும், சிலவேளை வழமையான, ரூட்டில ட்ராபிக் சாமா இருக்கும் அது தான், டிரைவர் ஷர்ட்-கட்டால விட்டு எடுக்கிறார் போல என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்!

இதே வேளை, தனக்கு நெட்வர்க் இஞ்சிநியரின்க் கிளாஸ் இருப்பதை உணர்ந்த பட்டு, உரத்த குரலில் "இசர கோல்ட் பயினவா!" என்று கத்த அந்த கம்பார்ட்மண்டே சிரிக்கத்தொடங்கியது!! பட்டுவும், வடிவேலை போல "ஏன் இப்படி சிரிக்கிறாங்கள்?" என்று ஜோசித்துக்கொள்ள, நிலைமையை உணர்ந்த்த தனஞ்சி பட்டுவை அழைத்து, " அழகான பொண்ணுங்க முன்னாடி மானத்தை வாங்காத‌, பஸ்சில போகயிக்கில தான் அப்படி சொல்லுவாங்கள், ரயிலில போகும் பொது இசர ஸ்டேஷன் எண்டு தான் கூற வேண்டும்,எண்டு சொல்ல இதை மிஷ்டர் பீன் படம் பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் தமது ஆரவாரத்தை தெரிவித்துக்கொண்டனர்! அருகில் இருந்த பெண்ண விழுந்து விழுந்து சிரித்தார்! அப்படி விழுந்து விழுந்து சிரித்தமையால், சிறிது காயமும் ஏட்படவே செய்தது!


ஒரு வழியாக ரயில் தனது கடைசி ஸ்டேஷனில் நின்றது! அனைத்து பயணிகளும் இவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தபடியே இறங்கினர்! இவர்களோ இன்னும் வெள்ளவத்தை வராதபடியால், இறங்காமல்,அப்படியே இருந்தனர்! என்னதான் இருந்தாலும் ரயிலை விட பஸ் தான் வேகம் கூட, கேவலம் இங்க இருந்து வெள்ளவத்தைக்கு போக மூண்டு மணித்தியாலம் எடுக்குது! பஸ்சில எண்டால் அரை மணித்தியாலம் காணும்! இந்த டிரைவருக்கு அவ்வளவு வண்டி ஓட்டத்தெரியாது போல என்று பொரிந்து தள்ளினர்! இப்படியே மேலும்,சுமார் அரை மணி நேரம் பொறுத‌திருந்தனர்! " பொறுத்தார் பூமி ஆழ்வார்" என்று தன நண்பர்களை அர்ஜீன் தேற்றியபடி இருந்தார்! இவர்களை பார்த்து சந்தேகம் கொண்ட போலிஸ் இவர்களை பார்த்து சிங்களத்தில் கண்மூடித்தனமாக பேச, சிங்களம் தெரியாத இவர்கள் குத்துமதிப்பாக கோரசாக " வெள்ளவத்தை பயிணவா!" என்று கூற, போலீசும் இவர்களின் பரிதாப நிலையை எண்ணி அழத்தொவங்கிவிட்டார்! பிறகு ஒரு மாதிரி அழுகையை நிறுத்திவிட்டு " தம்பிங்களா! நீங்க வெள்ளவத்தைக்கு போக வேண்டுமெண்டால், மற்ற‌ப்பக்கத்தில நிண்டு ஏறி இருக்க வேண்டும்! இப்ப பார்த்தீங்களா, அனுராதபுரத்திட்கு வந்திட்டீங்கள்!" என்று சொல்ல, "அநுராதபுரமா ஆ அ? என்றபடியே சுமந்திரன் மயக்கமடைந்தார்! அனைவரும் அர்ஜீனை தகாத மொழிகளில் அர்ச்சித்த படியே, அந்த போலிசின் உதவியுடன் சரியான ரயிலில் ஏறி தமது வெள்ளவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர்! இந்த முறையாவது சரியப் போக வேண்டும்,என்று குல தெய்வத்தை பிரார்த்தித்தபடியே பயணத்தை தொடங்கினர்! போகிற வழியில் அர்ஜீன் நண்பர்களை பார்த்து " இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்! " என்று கேட்டுக்கொள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டு மறுதினம் வெள்ளவத்தையை அடைந்தனர்!

யாவும் கற்பனை அல்ல‌!

சனி, 19 ஜூன், 2010

சாதனை நண்பர்கள்!



அண்மைய காலமாக பேஸ்புக்கின் மார்க்கட் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று ஒரே கவலைப்பட்டுக்கொண்டிருந்த நமது நண்பர்களின் நெஞ்சில் பால் வார்த்தால் போல் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2008 கணித பிரிவு மாணவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியிருப்பது அண்மைய செய்தித்தாள்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்து உள்ளது! இவர்களின் இந்த முன்னோடியான செயற்பாடுகள் உலகின் அத்தனை பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக‌வும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன!

யார் இவர்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிற்கு இருக்கும் ! வெள்ளவத்தையில் அண்மைய காலமாக சுற்றி திரியும் "நரேன் குரூப்" என அழைக்கபடும் அர்ஜீண் தலைமையிலான , பிரசாந்த்(பட்டு), பிரபல பாடகர் குருநாதரின் தவப் புதல்வன் ஜனா-குரு, காட்டுக்கந்தோர் ஒழுங்கை தனஞ்சி, டேஞ்சர் சுறையா, இவர்களின் அரசியல் ஆலோசகர் ஆனந்தநேசன், ஆகியோரும் இவர்களிட்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் எட்வின் லெஸ்லீ ஆகியோரே இந்த அணியினர்! அண்மைக்காலமாக பேஸ்புக்கை ஓபன் பண்ணினால் போதும் நூறு நோடிபிகேஸன்கள், பத்து பிரண்ட்ஸ் ரிக்குயஸ்ட் என்று ஒரே களேபரமாக இருக்கிறது பேஸ்புக்! அகா! பத்தில ஒரு ரிக்குயஸ்டாவது தெரிஞ்ச பெண்கள் எவருடையதாக இருக்க வேண்டும் என்று அத்தனை தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, மனம் பதைபதைக்க பார்த்தால், என்ன கண்றாவி! இவர்களின் முகம் தான் Requestஇல் இருக்கும்! அந்தக் கடுப்பில் requestஐ ignore பண்ணிட்டு, notificationஐ பார்த்தால், எதோ ஒரு போட்டோவில் நம்மளை Tag பண்ணிட்டு , வரிசையா கமெண்ட் பண்ணி இருப்பார்கள்!
என்ன தான் இருந்தாலும், பல மாதங்களாக வெறுமையாக இருந்த பலரின் புரோபயில்கள் இவர்களின் வருகையால் புத்துணர்ச்சி பெற்று உள்ளதை மறுக்க முடியாது!


இதே வேளை, வேலையில்லாமல் வெட்டியாக, பேஸ்புக்கிட்கு முன்னாலேயே, ஏதாவது notificationகள் புதுசா வருமா, நாம கமெண்ட் பண்ணலாமா என்று வழி மேல் விழி வைத்து காத்துகிடந்த றொமேஸானந்தா(நித்தியானந்த அல்ல) இவர்களின் வருகையால் புத்தெழுச்சி பெற்றார்! அவரின் மகிழ்விற்கு அளவே இல்லாமல் போய் விட்டது! சந்தோசத்தில் அழுதே விட்டார் என்றால் பாருங்களேன்! அதிலும், அர்ஜீணும், பட்டுவும் என்னமா கவிதை எழுதிறாங்கள்~! எங்கிருந்து தான் இப்படி வருதோ தெரியவில்லை! கேட்டால் "அதுவா வருகிதாம்"! இவர்கள் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாது!(அதுதான் இவங்களே அழிச்சுக்கிறங்களே என்று முட்டாள்தனமா கேட்கக்கூடாது ஆமா!) அசைக்க முடியாது!

அண்மையில் இவர்கள் தெகிவளை மிருக காட்சி சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேட்கொண்டது,தொல்பொருள் காட்சியகத்திட்கு சென்றது, ராவணன் படம் பார்க்க சென்றது, ரயில் பயணம் சென்றது(இந்த காமெடி நிகழ்ச்சி பற்றி பின்னர் விரிவாக எழுத்தப்படும்) என்று கொழும்பு நகரையே இந்த நட்சத்திரப் பட்டாளம் ஒரு கலக்கு கலக்கி வருகிறது! இந்த அணியில் இடம் பிடிக்க பல நண்பர்கள் தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கிடைகின்றன! கடந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கட் Big Matchசில் சென்ட் ஜோஎன்ஸ் மண் கவ்வியபோதும், "ஓடி பிடித்தல்" பிக் மட்சில்சென் ஜோண்ஸ் அணி மாபெரும் வெற்றி ஈட்டியது நினைவிருக்கலாம்! அந்த அணியில் இவர்கள் இடம் பெற்றிருந்தமையை இவர்கள் நிரூபிக்கும் முகமாக வெள்ளவத்தையில் தினமும் ஓடி பிடித்து விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன! பேஸ்புக்கை பழைய நிலை அடையச்செய்யும் முயட்சிகளில் தளராமல் உழைக்கும் இவர்கள் நிமித்தம் சென் ஜோன்ஸ் மட்டுமல்ல இலங்கை மாதவே பெருமை கொள்கிறது! எமது மண்ணில் இருந்து இப்படி திறமைசாலிகளா? நினைக்கும் போதே அப்படியே புல்லரிக்கிறது!

வாழ்க தமிழ்!

வளர்க உங்கள் சேவை!

புதன், 31 மார்ச், 2010

முக்கிய அறிவித்தல்! " மாயாவி- கவனம்!"

வாசக பெருமக்களே! இந்த வலை தளத்திலே பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை எழுதுகின்றார்கள்! எனவே , சிலருடைய படைப்புக்களால், எமது எழுத்தாளர் ஒருவர் ,தாம் அச்சுருத்தல்களிட்கு ஆளாகலாம் என்ற பயத்தில் இன்று வெள்ளவத்தைக்கு போகும் தனது திட்டத்தை கை விட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன! எனவே, பாதிக்கப்பட்டவர்கள், எம்மை தாக்குவது என்று முடிவு எடுக்கும் முன்னர், அல்லது தாக்குதலின் போது இவர் தானா உண்மையில் எம்மை பற்றி எழுதியது என்பதை உறுதி செய்த பின்னர் தாக்குதலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! எமது வலைத்தளத்தில் மாயாவி என்ற பெயரில் எழுதுபவர் காரசாரமாக, கர்ண கொடூரமாக எழுதக்கூடியவர் என்பதால், இவரின் ஆக்கங்களிட்கும், ஏனைய, எழுத்தாலர்களிட்கும் எது வித சம்பந்தமும் இல்லை, என்பதை நாம் உறுதியாக கூறுகின்றோம்!

செவ்வாய், 30 மார்ச், 2010

மாட்டு மாமாவிற்கு ஆப்பு!

அண்மையில் பலர் பற்றிய தகவல்களை இங்கே நாக்கை தொங்கப்போட்டபடி பார்த்துக்கொண்டு காலம் போக்கும் மாட்டை பற்றி எழுதி தள்ளுமாறு எமக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு ஆக்கப்படுகிறது!
மாட்டு மாமாவிற்கு இந்த பட்டம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் எமது, தொல்பொருள் நிபுணர்கள் குழு, பழைய சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சிதைந்த்த் தரம் நான்கு, ஐந்து வகுப்பு அறைகளை, தோண்டி அகழ்வாராய்ச்சியில் ஈடு பட்ட போதும் , பயன் தரும் படியான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை! எனினும், பழைய மாணவர்களின் வாய் மொழி பாரம்பரியங்களின் படி, அப்போதைய மாணாக்கர்களில், உடல் அமைப்பில் பாரிய அளவில் காணப்பட்டமையினாலும், இடைவேளைகளில் டிபன் பாக்ஸ் இல் புண்ணாக்கை கொண்டு வந்து உண்பதாலேயுமே இந்த பெயர் பழக்கமாகியதாகவும், மாமா என்ற சொல் எப்படி இணைக்கப்பட்டது என்பது பற்றி தமக்கு தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்!
இது தவிர, சென்.ஜோன்ஸ் வரலாற்றில் எமது பிரிவில் முதல் முறையாக மூக்குக் கண்ணாடி அணிந்த பெருமையும் மாட்டு மாமாவையே சாரும்! இதனை பாராட்டி அப்போதைய அசம்பிளியில் கவுரவ டாக்டர் பட்டமும், மாட்டு மாமா பட்டமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்! அப்போது தமிழ் படிப்பித்த ரகுநாதன் சார் , அதிகாலையில் எழுந்து உரத்த குரலில் வாசித்தால் குரல் வளம் நன்றாக வரும் என்று கூறியதை கேடு, ஒரு நப்பாசையில்,அதிகாலை எழுந்து உரக்க வாசித்த பொது , அவ்வேளை அவ்வழியால் சென்ற ஆசிரியர் அவர்கள், ஏதோ எருமை மாடு ஒன்று அவிட்டுக்கிட்டு , முக்கார‌மிட்டபடி ஓடி வருவதாக எண்ணி ஓட்டம் பிடித்தமையும் வரலாறாக பதியப்பட்டுள்ளன! திருக்குறள்,அது இது என்று, பரிசில்களை, தட்டி செல்லும், மாடு, ஒரு முறை, பாட்டுப் பாடுவதிலும் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில், மேடை ஏறி , பாடுவதாக எண்ணி, முக்கார‌மிட்டதில், அப்போதைய ஹண்டி நூலகம் இடிந்து வீழ்ந்த்ததும், போட்டி நடுவராக கலந்து கொண்ட இந்துமதி மிஸ் மயங்கி வீழ்ந்ததும் இவருடைய வாழ்நாள் சாதனைகள்! தொம்சன் கவுசில், எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல், வெட்டியாக இருந்ததால், கோபம் கொண்ட தவராஜா மிஸ் "எருமை மாடு! போய் கயிறு இழுவையாவது செய் என்று " திட்டி கயிறு இழுக்க அனுப்பியதும், கயிற்றை பிடித்தது தான் தாமதம், செக்கு இழுப்பது,நினைவிற்கு வர, கயிற்றை பிடித்தபடி, கிரவுண்ட்ஸ்ஐ சுற்றி சுற்றி இழுத்ததும் , அதில் இருந்து இவரிற்கு "செக்கு மாடு" எனும் பெயரும் இணைந்து கொண்டது! தரம் ஐந்திலேயே ரிபோர்ட் இல் கள்ள கையோப்பம் வைத்து பிடிபட்டு, எமது பிரிவில் முதல் முறை கள்ள சயின் வைத்தவன் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறார்! பின்னர் வளர்ந்தது, இங்கிலிஸ் ஜூனியன் பிரசிடன்ட் ஆக வந்து ஊர் உலகத்தில,இருக்கிற பெண்கள் பாடசாலய்களிட்கு எல்லாம் ஆங்கில தினத்திற்கு,கோபி, அஜந்துடன் சென்று சிறப்பித்து உள்ளார்! ஒரு முறை, நித்தியானந்த மக வித்தியாலயத்துக்கு சென்ற பொது, கலவரமடிந்த மாணவர்கள் " எருமை மாடு விழா மண்டபத்துக்குள் நுழைந்து விட்டது" என்று கால் தெறிக்க ஓடி இருக்கிறார்கள்! பின்னர் ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட, அதிபர் " இது மாடு அல்ல! மனிதன் தான்! பயப்பட வேண்டாம்! என்று கூறியபோதும், ஒரு வித பயத்துடன், விழா நடந்து முடிந்தது!
ஒரு சமயம் காதல் தோல்வியில் பாதிக்கப்பட்டு " பிரம்மச்சாரியாக போவதாக "ஏதோ ஒரு ஆத்மீக அமைப்பில் சேர்ந்தது ஸ்கூல் பிரிபக்ட் போல பட்டி அணிந்து சயன்ஸ் கால் இற்கு சென்று, இங்கு நான் தான் பிரிபக்ட் என்று பீலா விட, அருளரிடம் காதினை பொத்தி வாங்கி இருக்கிறார்! தற்போது கொழும்பில் மேய்ந்து திரியும் இவர் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்!!!!!!!!!!!

நண்பர் சாமி!

அண்மையில் எமது குழுவினர் மிகுந்த உயிர் அச்சுருத்தல்களிட்கும் மத்தியில் பலரை பற்றி எழுதி வீட்டை விடு வெளியேற முடியாமல் மூன்று நாட்களாய் முடங்கி இருந்த வேலையில், கொட்டாஞ்சேனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது! சிவ சிவா என்று அலறியடித்துக்கொண்டு ரிசீவ் பண்ணிய பொது , எதிர் முனையில் இருந்து செந்தமிழில்(பச்சைத் தமிழில்) எம்மை அன்புடன் அழைத்தபோது தான் எமது நெஞ்சில் தண்ணீர் வந்தது! அப்படி கொடூரமாக அழைத்ததில் இருந்து அன்னார சாமி தான் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது! "என்ன விடயம்" என்று கேட்டபோது, சற்று வெட்கத்துடன் சாமி அவர்கள், "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார்! "தினேசை தூக்க வேண்டுமா? நாய்க்குட்டி பிரச்சனை இன்னும் முடியவில்லையா?" என்று நாம் திருப்பி கேட்க," இல்லடா ம்மச்சான்! நான் கொஞ்சம் பேமஸ் ஆஹ வர வேண்டும்! அதுக்கு.....' "அதுக்கு?...." "இல்லடா இப்ப நீங்கள் கொஞ்ச நாளா குட்டி கருப்பன், ஜே.எம் .ஜே, மற்றும் பலரை பற்றி பல விடயங்களை கூறி, பிரபல்யம் ஆக்கிப்போடீன்கள்!, அத மாதிரி என்னை பற்றியும் ஏதாவது கேவலமா எழுதுங்கடா! அப்போ நான் பேமஸ் ஆகிடுவன்!! ஒரு செஞ் இற்கு, சாமி ஒரு ரவுடி அப்பிடி,இப்பிடி ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாய் ட்ரை பண்ணுங்கடா! பிளீஸ்" என்று கூற, நமது தொலைபேசி முனையில் இருந்து "த்தூ!" எனும் காரசாரமான இரைச்சல்! சாமி அவர்கள் 'என்னடா? ஸ்டேசனில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறா?" என்று அரக்க பறக்க விசாரிக்க, " இல்லடா ! காரித்துபினனான்கள்!" என்று கூற, சாமிலனிடம் இருந்து இனம் புரியாத வார்த்தைகளை கேட்கக்கூடியதாக இருந்தது! எமது காதில் இருந்து வடிந்த இரத்தத்தை துடைத்தபடி , விடயத்தை thodarnththom! சாமியை சமரசப்ப் படுத்தும் நோக்கில் , டேய் , உன்னை பற்றி என்னத்தை எழுத? டவுநிட்குல ஒருக்கா மோட்டார் சயிக்கிளில் வந்து உன்னை மிரட்டியதை பற்றி, எழுதவா? இல்லை, ஐந்தாம் ஆண்டில் அஜந்த, தக்காளியுடன் அடிபட்டதை எழுதவா? இல்லை ஆறாம் ஆண்டில் முதலும் கடைசி முறையுமாக உன்னால் ஒரு புள்ள பூச்சியை ( மரினோ) அடிக்க முடிந்த்ததே அதை எழுதவா? இல்லை குணம் சார் இன் பாடத்துக்கு செபமாலையை பிடித்து கும்பிட்டபடி இருப்பியாம் அதை பற்றி எழுதவா? இல்லை உன்னை வீடு தேடி வந்து அவ்வவ்போது மிரட்டும் பொடியளை, வீட்டுக்குள் அழைத்து , நெல்லிக்கிரசும் , கொத்து ரொட்டிஉம வாங்கி குடுத்து, உனக்கே உரித்தான பல நகைச்சுவை கதைகளை கூறி கூழ் panni anuppivittu , மறு நாள் emmidam வந்து " டேய், நேற்று அவங்கள் வீட்ட வந்தவங்க, நான் காதை பொத்தி irantu kuduththan , வந்த valiyae ஓடிட்டாங்கள், ஒருவனிற்கு பச்சை மட்டையால் தான் கலைத்துக் கலைத்து குடுத்தன், என்று பீலா vittiyae அதை எழுதவா? இல்லை நண்பர் visu ஒரு முறை "நேற்று எங்க veetitku மேலால போன கிபீர் கோன் adiththu விட்டு ponathu என்று கூற, arukil irunththa nee, " இத விடு எங்கட அப்பா கொழும்பிற்கு பிளேனில போகயிக்கில, எங்கட veetukku மேலால பிளேன் போகயிக்கில, "ஹாய் ! என்று sollittu தான் போனவர் என்று பீலா vitiyae அதை sollavaa? இல்லை senthil நாதன் சார் இன் class ஐ கட் adippathaal, கடுப்பான சார் , ஒரு முறை வீடு தேடி வந்து அம்மாவிடம் கம்பிலையின் பண்ண வர, அதை visu மூலம் அறிந்து கொண்டு , அயிஸ் வைத்து அனுப்பி விட்டு, அவன் என்னோட padikkira பெடியன், physics கோப்பி வாங்க வந்தவன் என்று டுமீல் விடேயே, அதை கூறவா?, இல்லை , ஒரு முறை விசுவுடன் மரினோ, உன்னை பற்றி நொண்டியாக கதைக்கும் பொது உன்னிடம் vasamaaka மாறயபோது, " டேய் அம்மா பாவம், அப்பா பாவம்,......" என்று கென்ச்சக் kenchcha கர்ண கொடூரமாக திடினாயே! அதை எழுதவா ,இப்படி பல கேள்விக்கணைகளை thoduththapothum satrum மனம் thalaraatha சாமி " adoi! நான் ஊருக்கிள ரவுடி எண்டு போம் ஆகிட்டான், thanchi, janakan(kattaippiraai), janakan(maattu maama) ஆனந்தநேசன், sumanthiran, விசு, சிவம், pattu இவங்கள் எல்லாம் அப்படித்தான் நம்புறாங்கள்! அதுக்கு ஏற்ற மாத்ரி எழுத்து! உன்னால முடியாட்டி சொல்லு, நானே எழுதி தாரன்! நீ பப்ளிஷ் பண்ணு!" இன்னொரு விஷயம் " அந்த பதிவிற்கு கீழ வந்து நான் கொடூரமா திட்டிரன், அப்பா தான் இத நான் எழுதினனான் என்று ஒருத்தரும் சந்தேக பட மாட்டாங்கள்! என்ன ஓகேவா?" என்று கூறினான்! அதுமட்டும் இல்லாமல் இன்னொன்றையும் கூறினார், " டேய், விசு மட்டும் கொஞ்சம் சந்தேக படுவான், என்னோட கனகாலமாக சுத்தினதில நம்ம பீலாக்கள் அவனிற்கு பிடிபட்டு போச்சு! ஆனாலும் பிரச்சினை இல்லை! அவன் விடாத பீலாவா நான் விடப்போறன்?"
எமக்கு இதை வெளியிட விருப்பம் இல்லாவிடினும், சாமிழனின் கொலை வெறி தாகுதளிட்கு பயந்தது இதை துரதிஷ்டவசமாக வெளியிடுகின்றோம்!

ஞாயிறு, 28 மார்ச், 2010

குட்டி கருப்பநிட்கு உதவுங்கள்!!!!!!!!!!


அன்பிற்கும் பெரு மதிபிட்கும் உரிய குட்டிக்கருப்பனின் நண்பர்களே! உங்கள் நண்பனை பற்றிய இந்த பதிவிற்கும எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை!
இது தான் குட்டி கருப்பனின் வாழ்க்கை! வாசியுங்கள்!
ஏ/எல் இல் அபாரமாக பாஸ் பண்ணிய கே.கே(குட்டிக்கருப்பன்) பின்னர் சிறிது காலமாக இன்று போல சும்மாவே சுற்றி திரிந்து கொண்டு இருந்தான்! இதை பார்த்த அவனின் அண்ணா கே.கே(குண்டு கருப்பன்) மிகவும் மனம் உடைந்து A.C.C.A இல் இணைத்து விட்டார்! கே.கே உம சிறப்பாக படித்து ஒருவாறு எக்ஸாம் எழுதி விட்டார்! பின்னர் பேசெபுக் இல் அமர தொடங்கிய கே.கே மிகவும் புத்துணர்ச்சியுடன் நாள் முழுவதும் இருக்க தொடங்கினார்! பாம்வில்லே விளையாட தொடங்கிய அவன் சச்சினை போல பாம்விலே இல் அரிய பல சாதைனைகளுடன் இன்றளவும் முன்னிலையில் உள்ளார்! இது தவிர யூடியூப் இல் பாடல்கள், படங்களை தரவு இறக்குவதில் இவனிக்கு நிகர் இவனின் அண்ணா மட்டுமே! தனது மகனின் அருமை பெருமைகளை கண்டு புல்லரித்துப்போய் இவனின் பெற்றோர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்! இது தவிர இவனின் குடும்பத்தாரிடம் இருந்தது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், இருபத்திநான்கு மணி நேரமும் கால் கதைப்பதாக அறிய வந்தது! எப்போதும் சும்மாவே இருக்கும் கே.கே ஐ பாராட்டி அண்மையில் ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது! அந்த விருதை பெற்று கொண்டு உரை ஆற்றிய கே.கே வானத்தை அண்ணாந்து பார்த்து " எல்லாப் புகழும் இறைவநிட்கே" என்று KOORINAAR! இதனால் உலகம் முழுவதிலும் தமிழின் புகழ் கோடி கட்டி பறக்கிறது! இந்த விருதை பெற்ற கே.கே , நியூ யார்க் டைம்ஸ் இற்கு அளித்த பேட்டியில் " சும்மா இருப்பது எவளவு கடினம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்!" என்றார்!.A.C.C.A. எக்ஸாம் எடுக்காது பெற்றோரை ஏமாற்றி திரியும் இவன், எப்போது அடுத்த எக்ஸாம் என்று கேட்டதற்கு" ஜனவரி, பிப்ரவரி,.... டிசம்பர்' என்று அணைத்து மாதங்களையும் கூறியஇவன், இதற்கு மேலும் கூறுவதற்கு மாதமே இல்லாத படியால் நிறுத்திவிட்டான்! சரி இவனின் தினசரி நேர அட்டவனையை பார்ப்போமா?
அதிகாலை நித்திரை விடு எழுவது ஒன்பதரை மணிக்கு! பின்னர் நேரடியாக டி.வீ இல் டி.வீ.டி இல் கண்டி வரை கேட்கும் அளவிற்கு கதறக் கதற பாட்டு கேட்பான்! அதில் ஒரு கிளுகிளுப்பு அவனிக்கு! அம்மா பேசும் மட்டும் கேட்டு விட்டு , பின்னர் முகம் கழுவாமல், பல் துலக்காமல் தண்டச்சோறு உண்பான்! இது முடிய , நேரடியாக முழு உற்சாகத்துடன் கம்பியூட்டர் நோக்கி சென்று, பேஸ்புக் இல் அமர்ந்தது தன்னை போல வெட்டியானவர்களுடன் சங்கத்து அரட்டையை ஆரம்பிப்பான்! இடையில் அகப்படும், அக்ஷய் நாதன் ஐ வம்பிற்கு இழுத்து பன்னிரண்டு மணி வரை காலம் கடத்துவான்! பின்னர் மட்டவர்களின் புரோபயில்களை கிண்டி கிளறி, அங்கே தன தடயங்களை பொரித்து விட்டு, பின்னர் பாம்வில்லே ஐ மூர்க்கத்தனமாக மூச்சு திணறத் திணற விளையாடுவான்! பின்னர் மறுபடி மத்யம் உண்டு விட்டு , மறுபடி,பேஸ்புக், பின் டின்னர், பின் மறுபடி பேஸ்புக்! இவை அனைத்தும் முடிந்த்த பின்னர் வெற்றிகரமாக தனது நாளை களித்த மன நிறைவுடன் , ஒரு வித வெற்றி களிப்புடன் ஒரு அபாரமான தூக்கம்! சக்சஸ் என்று கூறியபடி! இது தான் வெட்டி பயல்களின் வாழ்க்கை ! இதை வைத்து , தேசிய விருது பெரும் நோக்கில் இயக்குனர் பாலா படம் ஒன்று தயாரிக்கின்றார்! இதில் நடிக்கும் படி கேட்டதற்கு," நான் இப்போது சும்மாவே இருப்பதால் இதில் நடிக்க நேரம் இல்லை '"என்று கூறி இருக்கின்றன்!



எனவே குட்டிக்கருப்பனின் ஆண், பெண்ண நண்பர்களே! தயவு பண்ணி உங்கள் லவ் பிரைச்சினைகள், இன்னோரன்ன பிரைச்சினைகளிட்காக கே.கே ஐ இழுத்து அவனின் வாழ்கையை வீணடிக்காது, அடிக்கடி கால் பண்ணி படிக்க விடாமல் குழப்பாமல் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! பதிலாகA.C.C.A எக்ஸாம் எடுக்க அட்வைஸ் பண்ணி உங்கள் நண்பனை உட்சாகப்படுத்துங்கள்! பேஸ்புக் இல் அரட்டை அடிப்பதை நிருத்துன்க்கள்!

சனி, 27 மார்ச், 2010

மோட்டார் சைக்கிள் வாங்கிய kathai

நண்பர் ஒருவரிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி ஓடி எப்படியாவது தான் சயிட்அடிக்கும் பெண்ணை மடக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனாலும் அவன் அப்பனோ வாங்கி கொடுக்க மாட்டேன் என்றிட்டான்! நண்பர் சாதாரண ஆளே கிடையாது! ரொம்ப கெட்டிக்காரன்! நல்லா பிளான் பண்ணி செய்வான்! அதனால் ஒரு நல்ல திட்டம் ஒன்று தீட்டினான்! உடனேயே தன அம்மாவிடம் சென்று , " அம்மா அம்மா ! என்னால வெளியே தலை காட்ட முடியவில்லை! இனிமேல் நான் வெளியில் செல்ல முடியாது!" என்று அழத் தொடங்கினான்! அதை பார்த்து கவலை அடைந்த தாய் , " ஏன் என்ன நடந்ததது?" என்று கேட்டல். அதற்கு அவன் " அம்மா! அம்மா! மூன்று சில்லு சைக்கிளையே ஆறாம் ஆண்டில் ஓடி பழகிய கோபி, மானிப்பாயில் காற்று அடித்தால் மன்னாரில் போய் விழும் சயன் கூட பல்சர் ஓடுறாங்க! நான் மட்டும் லுமாலசைக்கிளை அலுக்க அலுக்க ஓடி திரியிறன்! ரோட்டில ஸ்கூட்டியில் போற பெண்கள் எல்லாம் காரித்துபிறாங்க" "என்றான். உடனேயே அம்மா ," கோபி, சயன் பல்சர் ஓடுவது பல்சர் கம்பெனி காரங்களிட்கு தெரியுமா? தெரிந்தால் கம்பனியை மூடிட்டு போயிட மாட்டாங்களா? என்று kettaar. அதற்கு அவன் " அது தான் சொல்லுறன், அவங்க கம்பெனியா மூடிட்டு போயிடுரத்துக்கில பல்சர் வாங்கி தாங்க அம்மா!" என்றான். அதற்கு அம்மா தயங்கியபடி, " வாங்கி தருவது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை! கோபி, சயன் எல்லாம் பல்சர் ஓடுறாங்கள் என்று கேள்விப்படும் போது கட்டாயம் பல்சர் தான் வாங்க வேண்டுமா என்று யோசிக்கிறேன், பேசாமல் "150" வாங்கித்தாறன் என்று 150 ௦வாங்கி குடுத்தாச்சு! அப்புறம் ஒரு நாள் கோபி, சயன் இருவரும் நண்பர் வீடிற்கு போய் இருகிறாங்கள்! அப்போ நண்பரின் அம்மா " எங்க உங்க பல்சர்? ஏன் லேடீஸ் சைக்கிளில டபிள்ஸ் வந்து இருக்கிறீங்கள்? " என்று கேட்க இருவரும் ஒன்றுமே விளங்காமல் மூச்சு திணறி இருகிறாங்கள் ! அப்புறம் தான் புரிஞ்சது நண்பர் பீலா விட்டிருக்கிறான் என்று! பிறகு நண்பரின் அம்மா " இப்படி இவன் கூறும் pothu என்னால் நம்பவே முடியவில்லை! நான் அப்படியே shoked ஆயிட்டான்!".
தாங்கள் பல்சர் ஓடினால் எப்படி இருக்கும் என்று இருவரும் சற்று நேரம் பொறுமையாக உட்கார்ந்து ஜோசித்து பார்த்தாங்க! அப்புறம் மூச்சு திணற திணற சிரிக்க ஆரம்பிச்சிட்டான்கள்! இந்த கதை வெளியில் லீக் ஆஹா , இத கேள்விப்பட்டு, நண்பர் அரவிந்த் அதர்ச்சியில் கோமா நிலைகுத்தள்ளப்பட்டார். aananth, பல்சர் ஓடுவதை அறவே நிறுத்திவிட்டார்! அது சரி, 150 வாங்கிய நண்பர்ஜே. எம்.ஜே இப்பொது ௧௫0 மேல் ஏறி உட்கார்ந்தது இருக்க அவனின் அப்பா 150 ஐ பின்னால் தள்ளிக்கொண்டு திரிகிறாராம்! ஏன் என்றால் நண்பரிட்கு மோட்டார் சைக்கிள் ஓடவே தெரியாதாம்!

நண்பர் ஒருவரின் கதை!

நேற்று ஆபீஸ் வேலை முடித்து களைப்பில் இருந்த போது நண்பர் ஒருவரின் கால் ! என்னடா என்று அரக்க பறக்க ரிசீவ் பண்ணியபோது , எதிர் முனையில் இருந்து நண்பர் கலங்கிய குரலில், நண்பா நான் ஒரு பெண்ணை எப்படியாவது காதலிப்பது என்று நண்பர்களிடம் சவால் விட்டு இருகிறேன், நீ தான் ஏதாவது ஐடியா தர வேண்டும் என்று கெஞ்சினான் . மேலும் தன்னை பார்த்து நண்பர்கள் " நீ இந்த மேட்டர் இற்கு சரிவர மாட்டாய் என்று நக்கல் அடிபதால் தான் இந்த முடிவிற்கு வந்தததாக கூறினான்! இது என்ன ஒரு சோதனை, அவன் மட்டும் சாதாரண மனிதனாக இருந்தால் சும்மா 1000 ஐடியா கொடுத்து இருபேன்.பயலிட்கு வயது இருபது ஆகியும் மீசை arumpavae இல்லை! பார்க்க இப்ப தான் ச்கொலர்ஷிப் கிளாஸ் இற்கு சபேசன் சார் இட்ட போறவன் மாதிரி இருக்கிறான்! என்னை வேற எதோ மதிச்சு ஐடியா கேட்கிறான், நம்ம staetas iyum வேற keep பண்ணனும், என்ன செய்யலாம் என்று உட்கார்ந்து யோசித்ததில் அருமையான ஐடியா கிடைத்தது! payal வேறு நிமிடத்துக்கு இரண்டு தடவை call பண்ணி ஐடியா rediyaa? ஐடியா ரெடியா என்று டார்ச்சர் பண்ணிக்கொண்டு இருந்தான்! அப்பபோ மிஸ்ட் கால் வேற! ஒரு மாத்ரி ஒரு மிஸ்ட் கால் லை பாய்ந்து ரிசீவ் சொன்னான்! ஐடியா வை சொன்னேன் ! " அட இது தான் ஐடியா! இப்போ உன் வீட்டுக்கு பக்கத்தில தவண்டு கொண்டு இருக்கிற ரீமா வை இப்போதைக்கு சைட் அடி! உன் சைஸ் இற்கு அது தான் சரி! அப்புறமா ஒரு ௨0 வருடம் கழிந்து, இப்போ நீ பின்னால திரிய "போடா பொடிப்பயலே என்று திட்டிய சினேகா கிழவியா போயிடும், அப்புறம் தினேஷ் அவளை விட்டு வேற ஒருத்தியை பார்க்க, அந்த கேப் இல நீ உன் லவ் வை சொல்லிடு!" என்று சொன்னேன்!
சொல்லி முடிச்சது தான் தாமதம், பயல் என்னை பாராட்டு, பாராட்டு என்று பாராட்டியே கொண்டிட்டான்! இப்போ எல்லாம் நண்பர் ரிமோட் கார் உம, பீ பீ குழலும் வாங்கி ஐஸ் வைக்கிரதிலியே முனைப்பாய் இருக்கிறான்! நண்பர் பெயரை சொல்லத்தான் ஆர்வமாய் இருக்கிறது! என்றாலும் சரிஇல்லை! நண்பர் இதை பார்த்தால் ரொம்ப வேதனைப்படுவார்!

ஐ.பீ.எல்.

நடை பெற்று வரும் ௨0-௨0 போட்டிகளில் எதிர்பார்ப்புகளிட்கு ஏமாற்றமாய் முன்னணி வீரர்கள் சொதப்பி வருவது ரசிகர்களிட்கு வெறுப்பை அளித்து உள்ளது. சனத், தில்ஷன், கங்குலி,அதிகம் எதிபார்க்கப்பட்ட பொல்லார்ட் என்று கோட்டை விட பொறுமையாய் ஆடி சச்சின் ரன் குவிக்க, மன்கூசுடன் ஹய்டேன் பெரிதஹா அசத்த முடியாமல் இருக்க பதான் சஹோதரர்கள் அசத்தி வருகிறார்கள். மறுபுறம் கொழுப்பு கூடிய சங்கா தலைமை, பட்டிங் இரண்டிலும் சோடை போக, அவரால் ஒதுக்கப்பட்ட வாஸ்,முரளி ஆகியோர் நக்கலாக சிரிக்கிறார்கள். சனத் மட்டும் அடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.ஆனாலும் என்ன தான் இருந்தாலும் ௨0-௨0 என்பது திறமையானவர்களின் போட்டி என்று சொல்ல முடியாது. கண்மூடித்தனமாக நொறுக்கும் முரடர்களின் சொர்க்காபுரி! அவ்வளவே!